Hot News :
For Advertisement Contact: 9360777771

வெளுத்து வாங்கப்போகும் கனமழை: தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை!

© News Today Tamil

தமிழ்நாட்டில் நாளை முதல் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 15) முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  7 முதல் 11 செ.மீ கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் நாளை முதல் ஜூலை 20-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் இன்றும்,  நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post முருகனின் முதல்படை வீட்டில் குடமுழுக்கு விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!
Next Post கணவரை பிரிகிறேன்... சாய்னா நேவால் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
Related Posts