Hot News :

கரூர் துயரம்... சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மனு

© News Today Tamil

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நடைபெறும்  சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக  தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது.

பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புக்குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில்,  சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் தவெக மனு செய்தது. அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக  சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என  தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில்,  கரூர் கொடுந்துயரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும். அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் நடத்தும் வகையில் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post ஜி 20 வெப்சைட்டில் தென்னப்பிரிக்கா பெயர் நீக்கம்- டிரம்ப் அதிரடி
Next Post திமுகவின் மதச்சார்பின்மை வேடம்- பாஜக கண்டனம்
Related Posts